பக்கம்:கவிதை உள்ளம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சமுதாயம்



செல்வமும் அறமும் சேர்ந்தினி துயர்க
தீமையே அற்றநல் வாழ்வு
பல்வளத் தோடு பாரிடைப் பரக்க
பழங்தமிழ்ப் பெருமையும் பயக்க 6


இறையருள் வளர்க இன்பமும் சிறக்க
இயங்குக இனியநல் வாழ்வு
பொறையுடன் மலர்க புகழ்நிலை புரக்க
புண்ணியச் செயல்பல புரிக
நிறைவளம் பெருக நீணிலம் நிறைக
நிலமெலாம் நெற்பயிர் நிலைக்க
அறைகழல் இறைவன் அடிபணி அன்பு
அவனியின் ஆகுக அழகே| 7



விசு, வைகாசி க, (15.5.41)ல் தமிழ்க்கலையில் வெளியானது, 147

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/149&oldid=1387688" இலிருந்து மீள்விக்கப்பட்டது