இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிறு பிரபந்தங்கள் 31. அக்காலத் தவன்புரிந்த வருந்தமிழ ரனவர்களும் எக்காலும் மறவாமல் இதயத்தே யிருத்திடுவார் இக்காய மழிந்தாலும் இசையழியாத் தன்மையில்ை மெய்க்கான வழிபலவும் வேண்டிஉடன் இழைத்திட்டான். புதுவைக் கேகல் 32. இவ்வாறு நிகழ்பொழுதில் இருஞ்சிறையைப் பலரடையும் ஒவ்வாத மாறுதலும் உதித்திடலும் கந்தலைவன் செவ்வான மதியமெனத் திகழ்ந்திடுதல் வேண்டுதலால் இவ்வாழ்வு தனைவிட்டு எழிற்புதுவைப் . பதியடைந்தான். 38. புதுவைாகர் தனிலமர்ந்து புரிந்தபல தமிழ்த்தாயின் விதவிதமாம் இன்னலங்கள் மேவுவண்ணம் ஆற்றுவித்தான் மதுவெனவே மனங்களிக்கும் மாண்கவிகள் மாநிலத்து இதுயிதுவே நிகர்க்குமென யியற்றியிசை யியற்றியிட்டான். வேறு 34. கருங்கடற் றிரைகள் கணக்கிலா தனவாய்க் காண்டொறு மின்பமே பயக்கும் பெரும்பயன் தருகற் புதுவைமா நகரின் பேரெழில் கூறின் அடங்கா 51