பக்கம்:கவிதை உள்ளம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம்



பின்னர் பலப்பலப் பேய்மை வந்தாலும்
பித்துச் செயல்பல பேசி நின்றாலும்
ஒன்றும் நினைத்திடாய் ஒன்றுக்கும் அஞ்சேல்
உன்அன்னை யாவையும் ஒட்டியே காப்பாள்.

அன்னைப் பணியதே அருந்தமிழ்ப் பணியாம்
ஆனந்தம் அதனிலே அல்லது உண்டோ!
முன்னைச் செயல்களை எண்ணிடா திங்கே
முகிழ்த்து வருகுவீர் மூளுமே இன்பம்
கண்ணினும் இனியவள் கருத்திடை நல்லாள்
கற்பகம் போன்றவள் அற்புத அன்னை
எண்ணிலும் உள்ளாள் அவ்வியல்வை அறிந்தே

ஏத்துவம் இன்பத்தே ஏறிட நாமே.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/77&oldid=1387642" இலிருந்து மீள்விக்கப்பட்டது