இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6
கனவாகவே உள்ளன என்பதைப் பயில்வார் உணர்வர்.
இந்நூலைக் கொணரக் காரணமாயிருந்த அனைவருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ‘கவிதை உள்ளம்’ என்ற முன்னைய பெயராலேயே இந்நூலையும் அமைத்துள்ளேன். கவிதை உள்ளமே கவி உள்ளத்தைக் காட்ட வல்லது. அவ்வுள்ளத்து முகிழ்ந்த உணர்வுகள் வழி வழியாக வரும் கவிஞர் உள்ளங்களில் நிலைத்து வையத்தை வாழ வைப்பன. அந்த வகையில் இக் ‘கவிதை உள்ளம்’ அமையும் என்ற உணர்வில் இந்நூலைத் தமிழ் மக்கள் முன் வைக்கின்றேன். ஏற்று ‘நலன் உளதேல் காண்க’ என வேண்டி அனைவுருக்கும் வணக்கம் கூறி அமைகின்றேன்.
தமிழ்க்கலை இல்லம்
சென்னை 30. 1-12-75
பணிவுள்ள
அ.மு பரமசிவானந்தம்.