பக்கம்:கவிதை உள்ளம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம்


நந்தமிழ் மக்களுமே - அவர்கள்
நயமறியா வழியில் மதிமயங்கி
விந்தையாய் நாடகமும் - கண்டு
வீணாகக் காலமதைப் போக்குகின்றார்
தெய்வப்பேர் கொலை நிற்குமோ - மற்றைச்
சீரில்லாத் திரௌபதி செயல் நிற்குமோ
வாருங்கள் தமிழர்களே - நாமும்
வழிபடு தெய்வமொன்றாய் வாழ்ந்திடுவோம்
இன்பத்தின் கரையெய்துவோம் - என்றும்
இறைவன் பதம் பணிந்து நிலையுறுவோம்
தெய்வத் தமிழ் மொழியும் - எங்கும்
சீர்நிறைந் தோங்கிடும் செப்பரித்தால்
உய்வைப் பெற்றே மிளிர்வீர் - என்றும்

உயர் நிலை பெற்றேமிக ஓங்குகவே. (செந்தமிழ்)



81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/83&oldid=1387530" இலிருந்து மீள்விக்கப்பட்டது