பக்கம்:கவிதை உள்ளம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம்



ஆண்டவன் அடியவராகி நின்றார் உயர்
அன்பு மழைபொழி வாசகனார்-மிக
ஆழ்ந்திடு சோதனை தாண்டிடவே பல
அல்லல் வழிநின்று மீண்டனர் காண்


ஆண்டவன் அடியவர் எத்தனைபேர் பல
அல்லலாம் சோதனை தாண்டிகின்றார்-நிதம்
வேண்டிய சோதனை நம்மிடை வருவதை
வீணென எண்ணியே வாடுகின்றோம்

சோதனை வென்றிடல் தூய்மை தாம் உயர்
சாதனை யென்பதே சாந்தியதாம்-இனி
வேதனை அற்றுமே வித்தக ராகவே
விளங்குவீர் சாதனை வேண்டு மென்றே


சாதனை பெறுதற்குத் தக்கதொன்று இந்தத்
தரணியில் உண்டெனச் சாற்றிடுவேன்-என்றும்
நீதியால் மனத்துாய்மை யெய்திடிலோ இன்பம்

நீடிடும் உண்மையே நேர்ந்திடுவீர்.[1]


——————

  1. * விசு, ஆவணி, க, (15.8.41ல்)தமிழ்க்கலபில் வெளிவந்தது

89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/91&oldid=1387615" இலிருந்து மீள்விக்கப்பட்டது