பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=கவிதைளில் நேர்மொழி, குறிப்பு மொழி ஆகியவற்றின் பங்கு என்ன? - = புரியாமை, அல்லது கருத்துப் புலப்படாமை என்பவை கவிதைகளில் ஏன் நேர்கிறது? = புலமை, படைப்பு - இவற்றினை எப்படி வேறுபடுத்தி அறிவது? = கவிதையால் சமூக உணர்வு? = கவிதையில் நகல் கவிதைகளின் விளைச்சல் ஏன்? - இப்படி விரியும் பன்முகக் கேள்விகளுக்கு எளிதில் யார்க்கும் வசப்பட உரைக்கும் ஆற்றலுடன் விடைகள் இந்த உரையாடலில் வெளிப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் புதிய கவிதை பற்றிய, கவிதை இயல் பற்றிய முகவரி இந்நூலில் இடம் பெறுகிறது. காலங்கடந்தாவது வெளியிட்ட மகிழ்ச்சியோடு அகரம் இந்நூலை வெளியிடுகிறது. இதற்கு அகரமாகிய விகடனுக்கு நன்றி.