பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாயும் திறன் .105 م -- சுதந்திரத்தின் பாட்டாக சுதந்திரத்தின் பெருமை’, ‘சுதந்தி ரப் பயிர், சுதந்திரத் தாகம்’, ‘சுதந்திரப் பள்ளு’, ‘சுதந்திர தேவியின் துதி”, “விடுதலை’ என்ற பாடல்கள் அமைகின் றன. இந்தப் பாடல்களைப் படிக்கும்போது - இல்லை, பாடும் போது - உள்ளம் துடிப்பதை அறியலாம். முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்’ அவர் சிந்தனையில் எழுகின்றன. விடுதலைப் பயிரும் அவர் மனத்தில் முகிழ்க்கின்றது. ஆங்கில ஆட்சியில் அடிமைதான் நம்மவர்க்குப் புதிதேயன்றி விடுதலை - சுதந்திரம் - புதிதன்று என்று அவர் தூய மனம் எண்ணுகின் றது. இந்தியத் தாயை பாரத மாதாவை - நோக்கிப் பேசுகின்றார். நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாம்கேட்டால் என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ? (13) இன்று புதிதாய் இரக்கின்றோ மோ?முன்னோர் அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ?" (14) ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்து விட்ட நம் நாட்டின ரிடம் இடைக் காலத்து வந்த இழிநிலையை எடுத்துக்காட் டிக் கழிவிரக்கம் கொள்கின்றார். அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம் ஆணிமுத்துப் போன்றமணி மொழிக ளாலே, பன்னிநீ வேதங்கள் உபநிட தங்கள், பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகா சங்கள்; 34. பா.க: சுயசரிதை - 26 35. பா.க. சுதந்திரப் பயிர் - 13.14