பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

ஒரு கவிஞன், மகளுக்கு தீபாவளி பரிசாக, “நான் உனக்குக் கொடுப்பது ஒரு மேதையின் இரவல் வாக்கியமே. அதை மறவாது மனதில்வை! 'பிறர் தவறுகளை தேடிப் பார்க்காதே. உன் தவறுகளைத் தேடிப் பார். அதை அறிந்து களைந்தெறி அதுவே உன் துன்பங்களுக்கெல்லாம் தீர்வாகும்” என்கிறார்.

கவிச்சக்ரவர்த்தி ரவீந்திரர்:

"அவன் என்னை ஏசுகிறான் என்றால், அதைத் திரும்பச் செய்ய என்னால் முடியாது. ஏனெனில், நான் புகழ முடியாத ஒருவனை எவ்வாறு நான் இகழ முடியும்?" எனக் கேள்வி எழுப்புகிறார்.

சிறுவயதில் தாய், பின் முதல் குழந்தை, கணவன் என இறந்தவர்கள் அனைவரும் மறக்கப்பட்டு விட்ட போதும். எனக்கு வறுமையை மட்டுமே பரிசாகக் கொடுத்த தந்தை, நெஞ்சில் நீங்கா இடம்பெற்று விட்டது ஏன்?

நினைவிலேயே நெகிழும் இதயம். கலங்கும் உள்ளம் கண்ணீர் சொரியும் கனகள் என, கவிஞன் செத்தும் என்னை சொந்தமாக்கிக் கொள்ள வைத்தது எது?

கவித்துவம்...! அது... சாகாவரம் பெற்றது. அது, என்றும் வாழும் நிலை பெற்றது.

கவிச்சக்கரவர்த்தி ரவீந்திரர் சொல்கிறார்.

“உன் காலிலே விழுகிறேன் சரத்பாபு
ஒரு கதை எழுத வேண்டும் நீ
ஒரு சாதாரணப் பெண்ணின் கதை
குறைந்தது ஆறேழுதி அசாதரணப் பெண்களுடன்
போட்டி போடும் நிர்பந்தம்
அந்த அதிஷ்டக் கட்டைக்கு...!
அப்படியும்
எனக்காக
அவளை வெற்றி பெறச் செய்து விடு
உன் கதையைப் படிக்கப், படிக்க
என் நெஞ்சு....
விம்மி பூரிக்கட்டும்” என்கிறார்.

10