பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

மண்ணிடையே வெண்ணிலவில் வட்டம் சுற்றி
மலாக்கரத்தி னிதழ்விரலால் சுட்டிக் காட்டி,
'விண்ணிடையே மிளிர்கின்ற தங்கத் தட்டு
விலையில்லை யெடுத்துத்தா அப்பா!' என்றாள்.
பண்ணிடையே தெறிக்கின்ற இன்பச் சொற்கள்
பரவசம்செய் தெனைவருத்தப் 'பலிக்கா' தென்றேன்.
கண்ணிடையே கருமணிகள் கசங்கும் வண்ணம்
கைகொண்டு பிசைந்தாளைக் காணோம்! காணோம்!

123