பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

பெற்று வளர்த்தவர் பெரிதும்
விரும்பியது - செல்வம்
பேணிப் பெருக்கிய பின்,
குற்றங் குறையுமில் லாமல்பல்
லாண்டுகள்தான் - இந்தக்
குவலயத்தின்புற வே!
முற்றிலும் பொன்னுடல் பெற்றநல்
மீனினங்காள் - ஆசை
மூளவில் லையிதிலும்!
சுற்றமா யுங்களைப் பெற்றுச்
சுடருவதே - சாலச்
சுகமென எண்ணுகிறேன்!

'வாழ்விலும் தாழ்விலு மொட்டியே
வாழ்வெ'னென - வாய்த்த
வாழ்க்கைத் துணைவியவள்,
'ஏழ்கடல் வைப்பினி லுள்ளநல்
இன்பமெல்லாம் - இனி
ஈகுவ' னென்றுரைத்துத்
தாழ்வறு மேல்நிலை யில்சுடர்
மீனினங்காள்- பிரிவுத்
தழலினில் தள்ளிவிட்டாள்!
ஊழ்வினை கூட்ட மறுப்பினும்
நான் முயல்வேன் - உம்மோ
டொருவனா யொன்றுதற்கே!

127