பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

உத்தமரே! யும்மை யுயிர்போ லுளத்துன்னி
மெத்த விழைந்தின்று மேவினோம்;- ஒத்த
உரையாற்றே மாகவெம் முள்ளத்தை மூடித்
திரையேற்றி வைத்தோம் தினம்!

ஆயினுமின் றும்மை யழைக்கின்ற தன்புடனே
தாயினும் சாலத் தவிக்குமுளம் - சேயெனவே
ஆரா விருப்ப மகத்தின் வெளிப்போந்து
நேராக வந்து நெகிழ்ந்து.

தொன்றுதொட்டுட்கிடக்கை தோன்று மியல்பிதுவோ!
ஒன்றிப் படிந்திருந் துள்ளத்தி - லின்று
பிரிவென்ற போதெ பெரிதும் வெளிப்போந்
துரியவரை யூக்க லுடைத்து!

வேறு பலரும் விரைந்தங்கு வந்தவராய்க்
கூறுவது கேட்டுக்கை கூப்பியே - ஏறனையோன்
மாறாகக் கூடி மனமின்றிக் கண்ணில்நீர்
ஆறாக விட்டா னழுது!

பின்னே அவனும், பெருமக்க ளும்கோவில்
முன்னே யமைந்தவெழில் முற்றத்தை - 'அன்னோ' யென்
றேங்கும் குரலி லுருகி யழைத்தவ ராய்ப்
பாங்குடன் சேர்ந்தார் பரிந்து.

கோவிலுக் குள்ளிருந்து வந்தாள் குவலயமே
ஆவலுடன் போற்று மலமம்மா! - தேவதைபோல்
முக்கால மோர்ந்துரைக்கும் மூதாட்டி, முத்தமிழை
யெக்காலு மாய்வா ணிருந்து.

151