பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

நீண்டகொம் பினிற்குரங்கு - இனிது
நீங்கிய திரவெனவே
பூண்டபே ரன்புடனே - மந்தியின்
புறத்தை அணைக்கிறது!

உய்வகை தனையுணர்ந்து - வாழும்
உயிர்களின் உவகையிலே
தெய்வீக அன்புணர்ச்சி - எழும்பித்
தேங்கிடச் செய்கிறதே!

18