பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

வேட்பு


சுற்றி விரியும் கதிர்க்கரம்
முற்றிலுமே - சுருக்கிச்
சூரியன் போய் மறைந்தான்.
உற்ற செல்வம் உதிர்த்தவர்
உள்ளமென - உலகம்
உகைந்த திருள்தனிலே!

பகலெ லாம்பய னற்றுக்
கழிந்ததுகாண் - பொட்டல்
பதையைப் பார்த்தபடி
சுகமெலாம்தமிழ்த் தோழியின்
பால்பெறவே - இரவில்
சுற்றித் திரிந்திடுவேன்.

நறும ணங்கமழ் தென்றல்
நிலவையெலாம் - வானில்
நல்ல இளம்பிறையார்
வெறும ணற்பரப் பில்வெகு
வாயிறைத்தே - என்னை
வேதனை செய்திடுவார்!

தூய எண்ணங்க ளாகிய
நல்லணிகள் - ஒலி
தோன்றும் குறிப்பினிலே
பேயு றங்கிடும் நள்ளிர
வாயிடினும் - கண்டு
பேசிக் களித்திடுவேன்!

33