பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

வான மன்றில் பரவி
வயங்கவரும் - நல்ல
வண்ணத் திருச்சுடராம்
மீனினங்களினூடு
மறைந்திருப்பாள் - காதல்
மேலிட நாண முடன்!

கயல்கள் துள்ளிக் கதிரில்
மணியுதிர்க்கும் - எழில்
காட்சி தனில்மகிழ்ந்து
வயல்க ளோடு வரப்பில்
அமர்ந்திருப்பாள் - என்றன்
வானெதிர் பார்த்தவளாய்!

மேக மண்டலம் தன்னில்
மிகுந்தொளிரும் - மின்னல்
மேனியாய் மேவிய வள்
மோகனச்சிறு புன்னகை
ஒன்றினிலே - இன்பம்
முற்றும் முகிழ்த்திடுமே!

34