பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

'இதற்காக இதைப்படிநீ என்ப தென்றும்
இயல்புமக்கின்றேன்மறந்தீர் இதைநீர்" என்றாள்.
'முதற்காதல் இடைக்காதல் எதுவு மின்றி
மூத்தவர்கள் மொழிந்தமுறைப் படியு மின்றி,
எதற்காக வும்என்மேல் ஆண்கள் வாடை
என்றும்பட வேண்டாமென்றாளாம் அல்லி:
அதற்காகத் தானிதைப் படிக்க வேண்டும்
அரம்பையே, ஊர்வசியே!” என்றேன் நானும்.

கொடிக்கென்ன குத்தியதோ! முல்லை மூரல்
குமுதச் செவ் விதழின்மேல் குந்திக் கொள்ள,
வெடுக்கென்ன மென்றளிர்க்கை யோங்கிக் கண்ணில்
வெகுளித்தீப் பொறிபறக்க வீசி யென்றன்
இடக்கன்னம் கன்றிடவே அறைந்தாள்: நேர்ந்த
தின்னதெனத் தெரிவதற்குள் எழிலி யேற்பத்
திடுக்கென்னப் படியிறங்கிச் சென்றாள்; சற்றும்
திரும்பியெனைப் பாராமல் தெருவைத் தாண்டி!

விண்ணிலிருந் தெழில்பருதி விலகா முன்னே,
வெண்முல்லை விரிந்துமணம் வீசா முன்னே,
பண்ணையினங் கண்டிசைக்கும் பாடல் வண்டு
பதுமமலர் குவியவிட்டுப் பறக்கா முன்னே.
திண்ணைதெரு திசையனைத்தும் இருளாயின்று
திகைக்கஎனைச் செய்ததெது? தெரிவை என்றன்
கண்ணையும்தன் காதலுடன் - களைந்து கொண்டு
கடிதகன்று சென்றனளோ காணே னன்றே!

43