பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

"கொல்லையிலே கொழுந்தோடிப் படர்ந்து நன்றாய்க்
கொழுகொழைன அரும்பெடுத்துக் கமழும் நல்ல
முல்லையிலே பிறவாமல், முகந்து மேயும்
மோட்டெருமை மோந்துடலை மூழ்க்குங் கோரைப்
புல்லயிலே கொண்டகுள நீரில், வெய்யோன்
போய்மறைந்த நள்ளிரவில் பூக்கும் பொல்லா
அல்லியிலே பிறந்தவளின் கதையில் என்ன
அதிசயத்தைக் கண்டீர்நீர் அத்தான்?" என்றாள்.

துளிக்கவலை எனக்காயுன் னுளத்தில் வைத்து
தொழுவத்தைப் பார்;அட்டில் பார்; தொடர்ந்து;
ஒளிக்கவிலை உன்னிடத்தில் எதையும் நானும்
உறங்கவிலை ஒருதுளியும் இரவில் ஒக்கக்
குளிக்கவிலை; குடல்குறைந்து கூவா முன்னே.
கொண்டுவந்தேன் உனவெனவே, உனது கையால்
அளிக்கவிலை! இவ்வளவும் இருக்க, அந்த
அல்லிகதைக் கவசரமேன் தாரா' என்றேன்.

திறந்திருந்த வெளிக்கதவை விரைந்து மூடித்
தினமும்போல் செயலிலவள் திளைக்க லானாள்;
முறிந்திருந்த மனமிரண்டொன் றாயிற் றென்று
முகமலர்ந்தேன் கடன்கழித்து முடித்தேன் நானும்.
சிறந்திருந்த நெய்விட்டுச் சுட்டத் தோசை
சிவக்க அரைத் திட்டசுவைத் துவையல், சேரக்
கறந்திருந்த பசும்பாலைச் சுண்டக் காய்ச்சிக்
கடும்பசிக்கு மருந்திவதனக் கொண்டு வந்தாள்.

49