பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

மூசுகின்ற முல்லையிவள் மூக்கிற் கென்றும்;
மோகனமாய் விண்வெளியில் முகிழ்த்து வந்து
பேசுகின்ற பெருமதிதான் கண்ணுக் கென்றும்!
பிறிதொன்று மினையில்லை யெனவே பேச,
வீசுகின்ற மனப்பலவின் சுளைவாய்க் கென்றும்;
விதிமுறையாய் இசைகூட்டி விரும்பிக் கேட்க
மாசகன்ற மகரந்த மலரில் பாடும்
மதுகரம்தான் மாதிவளென் செவிகட் கென்றும்!

பொழுதன்று புதிதாகப் புலர வில்லை;
பூவுலக மும்புதிதாய்ப் பிறக்க வில்லை;
விழுதொன்றும் ஆலமரத் தளிரில் தங்கி
விடியலிலே விருந்தயர விழைந்த தும்பி,
பழுதொன்று மில்லாத பதுமந் தன்னில்
பண்பாடிப் பசித்துமது பருகக் கண்டும்
 எழுதென்று துண்டாதென் னிதய மின்றேன்
எதையெதையோ எண்ணிக்கொள் டேங்கல் லுய்யும்!

அகிலொன்றின் மனங்கமழும் கூந்தல் ஆடும்
அருங்குவளை மலர்விழிகள்; அமைந்த ஆலைத்
துகிலொன்றி மூடியபொன் மேனி, துள்ளித்
துணையொன்றுக் கொன்றென்னத் தோன்றா நின்ற
நகிலொன்றி நலிக்கும்மின் னிடைமற் றெல்லாம்
நாடோறும் போலன்றி. நயக்கச் செய்து
பகலொன்று பயனின்றிக் கழியு மாறு
பைத்தியமாய் எனைப்படுத்தி வைக்கும் போலும்!

50