பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

எண்ணெ யாகவும் நானிருப்பேன் - திரி
என்ன நீயும் இணைந்திருந்து
கண்ணி னுக்கொளி யாயெரிந்து - அடி
கங்குல் தோறும் கவினுறின்நாம்
மண்ணில் வீடு மறுத்திடினும்-போற்றி
மக்கள் யாரும் மதித்திருக்கும்
விண்ணில் வீடு கிடைத்துவிடும் - இனி
விரைந்து வந்திங்கு சேரெனவே!

71