பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

மலையும் மயிலும்

பச்சைப் பயிர்கள் வளர்ந்திட வென்றோ
பால்ப சுக்கள் பருத்திட வென்றோ
இச்சகத்தில்பல் லாயிரங் கோடி
இனிய சீவன்கள் வாழ்ந்திட வென்றோ
நிச்சயம்செய்து கொள்ள நினைத்து
நீண்ட நேரம் நெருங்கி யுசாவி
உச்சி வானில் குழுமி முகில்கள்
ஒருங்கு மின்னி உருமுதல் கண்டே!

மதிமுகத்தில் மலர்ச்சி மறைந்து
மனது நொந்தனள் தாரகை மெத்த!
பதைப தைப்புடன் நானு மெழுந்தேன்.
பதுங்கி நிற்பதற் கோரிடம் தேட!
'இதய மென்மலர் வன்பிணி தீர
இன்றெ ழுந்தது கார்முகி' லென்று
புதிய போதை பொருந்தப் பொலிந்து
போற்றுந் தோகை எழில்மயி லொன்று!

குடியிருந்தஎன் வீட்டுக்கு முன்னால்
கோவி லில்குடி கொண்டுள்ள தேவி
கடிம லர்ப்பொழிப்பைம்புற் றரையில்,
கவின்மி குந்ததோர் காட்சியி தென்ன.
இடிமு ழக்கினுக் கேற்ப வியங்கி
இலங்கும் தோகை குலுங்க விரித்து,
படியி லும் ஒரு சொர்க்கமுண் டென்னப்
பரத நாங்டடியம் பண்ணிட லாச்சு!

75