பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

சொல்லும் செயலும்

அந்தி மயங்கும் சமயத்திலேஅம
ராவதி யாற்றங் கரைதனிலே - அந்தச்
சுந்தரக் காட்சியில் சிந்தை சுகத்தினில்
சொக்கியமுங்கியிருக்கையிலே!

சின்னஞ் சிறுபிறை என்னவோ சீக்கிரம்
செப்ப விரும்பிச் சிரித்ததனால் - அதன்
கன்ன லுரைகளைக் கேட்கக் கருதியென்
காதைக் கொடுத்துக் களித்திடவே!

'ஏனெனக் கேட்க எவருமிங் கில்லையோ
ஈசா இதுமுறை யோ வெனவே - ஒரு
தீனக் குரலென் செவியில் விழுந்து
திடுக்கிடச் செய்தது. 'ஆ' வெனவே!

தேவன் பெயர்சொல்லிக் கூவி யுரைத்திடத்
திக்கு திசைதெரியாதவரோ? அந்தோ!
பாவம், பாவம்! அவர் யாரெனப்பார்த்துப்
பயத்தை யாற்றிடலாமெனவே.

கருணையைக் காட்டும் தருணத்திற்காகவே
காத்துக் கிடந்தவன் போன்றெழுந்து - சென்றேன்
மரணத் துயர மெனினும் சரியதை
மாற்றுவ தென்ற மணந்துணிந்து!

80