பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

வாடி வதங்கி யுதிர்ந்துலர் கின்றவுன்
வண்ண மலர்களெலாம் - மாதர்
நீடிய கூந்தலில் சூடல் நலமென
நெஞ்சு நெகிழ்ந்து ரைத்தேன்.

கூம்பிக் கிடந்த குலக்கொடி முல்லையும்
கூர்ந்திதைக் கேட்டவுடன் - நல்ல
பாம்பெனச் சீறிப் பகர்ந்தது மேனி
பதறப் படபடத்தே!

'சொன்னதைச் சொல்லுங் கிளியெனச் சொல்லவே
சொந்தமில் லாதசொற்கள் - சொல்லி
என்னையு மேய்க்க இயம்புவதில்பய
னெள்ளள வில்லை.ஐயா!

சொல்லும் விருப்பம் முளதெனிற் சொல்லுக!
சொந்த அனுபவத்தை - அது
இல்லை யெனின்சற் றிருந்தினிச் செல்லுக!
இவ்விடம் விட்டெனவே!

நல்லவர் சொல்லினில் முல்லைக்குங் கூடவா
நம்பிக்கை யற்றது நாட்டிலென ஒரு
எல்லையில் லாத இடும்பையில் மூழ்கியே
என்னை மறந்தித யம்மெலிந்தேன்.

ஈகை யெனுமின் வியல்பினைச் செய்கையில்
இக்கொடிக் கின்றுகாட் டாதவனாய்
ஏகுவதில்லை யினியென நொந்தென்
ளிைதய மிடகுறும் வேளையிலே!

84