பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

அன்னையின் ஆணை

அன்னை யாருயிர்த் தெய்வமுள் ளன்பெனும்
அளப்பருங்கட லானவ ளார்வமாய்த்
தன்னை முற்றிலு மென்னலம் பேணவே
தந்த வள்தள ராத வுழைப்பினள்!
சின்னஞ் சிறிய கதைகளைச் செப்பியென்
சிந்த னைக்கு விருந்துசெய் வித்தவள்:
பன்ன ரும்நலன் தேடி யளித்தவள்
பாயின் மேல்கிடந் தாளுடல் நோயினால்!

சிரத்தை யோடிர வும்பக லாகவே
செயல்மு றைப்படி வந்துதன் தேர்ச்சியைப்
பொருத்தி வைத்தியம் பார்த்த மருத்துவர்,
பொழுதி றங்கிடப் போய்விடு மிவ்வுயிர்
வருத்த முற்றுப் பயனிலை, அன்னையின்
வாழும்நாட்க ளனைத்தும கழிந்த'தென்
 றருத்த மாக வுரைத்துவிட் டேகவும்.
யாது செயலென் றணங்கிட லாயினேன்!

உறவி னர்பலர் கூடி யிருக்கவும்,
ஊரினர்.வரப் போகவும், வீட்டினில்
பிறவி மறைவுக் கிடையுள்ள வாழ்க்கையின்
பெருமை, சிறுமைகள் பேசி யளக்கையில்,
முறுவல் பூத்த முகத்தின ராகிவே
முன்றி லில் இளம் பிள்ளைக ளாடவே,
உறுவ தென்கொலென் றுக்க மிழந்துநான்
உளமு டைந்துலை வெய்திட லாயினேன்.

90