பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 எண் சீர் விருத்தம் சங்கு முழங்கியது நாமிருக்கும் நாட்டிற்குத் தமிழ்நா டென்று நாமமிட முறையிட்டோம்; ஆள்வோர் பட்டை நாமமிட்டார் நம்முகத்தில்: மாற்றுக் கட்சி நல்லறிஞர் உரைத்தமையால் மறுத்தோம் என்றார்; தீமனமா? ஆணவமா? ஆட்சி தந்த செருக்குரையா? அடிமைமனப் போக்கா? இல்லை; நாமமது தமிழரெனத் திரிவோர், நாட்டை நற்பெயரால் அழைப்பதற்கு நாணி நின்றார் என்னாடு தமிழ்நாடென் றியம்பக் கேட்டால் என்செவியில் தேன் பாயும் என்று கூறின் பன்னாடை மதியுடையார் வெறுப்புணர்ச்சி பகையுணர்ச்சி என்றெல்லாம் பகட்டு கின்றார்; தென்னாடென் றுரைத்தாலோ ஒன்று பட்ட தேயத்தைப் பிரிக்கின்ற உணர்ச்சி யென்பார்; எந்நாளும் தமிழரெனும் உணர்ச்சி யின்றி இருப்பவரே பாரதத்தின் புதல்வர் என்பார் உன்னாட்டில் தமிழாட்சி கொடுத்து விட்டோம் உயர்கலைகள் தமிழ்மொழியில் உண்டா? என்று தென்னாட்டை உணராதார் கேட்பர்; உண்டு; தீக்கிரையாய்ப் போனதுண்டு; நெஞ்சை யள்ளும் பொன்னேட்டைத் தின்றொழித்த நெருப்பும் சொல்லும் போகட்டும்; புதுக்கலைகள் செய்து காட்டும் முன்னேற்றம் தமிழிலுண்டு; நேற்று வந்த மொழியாளர் கேட்பதெனில் விந்தை தம்பி! _ பேரறிஞர் அண்ணா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது தமிழ் நாடெனப் பெயர் சூட்ட வேண்டினர். நீங்கள் கூறுவதால் பெயர் மாற்ற மாட்டோம்' என்றார் ஓரமைச்சர்.