எட்டய புரத்தில் எழுந்திடும் பரிதி அவனே பாரதி வாழிய அவன்பேர்! என க்குப் பாட்டன் இசைதரு கவிதை இயம்பிய பாரதி பாட்டைப் பண்ணொடு கேட்ட பட்டிக் காட்டான் பகர்ந்ததாக் கவிமணி இசைத்தபின் யானுங் கூறல் நானுந் தகைத்தே இருப்பினும் உரிமை எனக்கும் உண்டு; பாரதி தாசன் பரம்பரை வந்தோர். பலர்பலர் ஆவர்; பாப்புனை தொழிலால் யானுமம் மரபே யாவரும் அறிகுவர்; பாரதி தாசனைத் தந்தோன் பாரதி அத்தகு முறையால் அவன் என் பாட்டன் பாட்டன் பாட்டினைப் பாடுவன் கேண்மோ! அவன்தரும் நன்னூல் கதிரோன் மறைதல் கானா நாட்டிற் காரிருள் நுழையக் கண்டதப் பாட்டு; வீட்டில் நாட்டில் வெறுத்தோம் தமிழைக் கண்ணயர்ந் திருந்தோம் கண்டனன் துடித்துப் பாரெலாம் தமிழொலி பரப்புக என்றே ஆனை தந்த(து) அவன்நூ லன்றோ? நெஞ்சில் உரமிலார் நிமிர்ந்து நடந்திட வஞ்சனை போக்கி வாழ்வு மலர்ந்திட உடலும் உளமும் உரம்பெறப் பாடிச் சோதிடம் இகழ்எனச் சொல்லும் அந்நூல்; SSMSSSMSSSMSSS 41 (35) o o 4. " (40) கதிரோன் மறைதல் கானா நாட்டிற். காரிருள் நுழையக் கண்டது அப் பாட்டு - என்பது, ஆங்கிலப் பேரரசில் கதிரவன் மறைவதில்லை என்று சொல்லி வந்ததையும் நம் நாட்டை விட்டு ஆங்கிலேயரை அகற்றி விட்ட மையால் அவ்வாட்சியில் கதிரவன் மறைதல் கண்டமையையும் குறிக்கிறது.
பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/44
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை