பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஆட்டின் தசைசுவைத்தான் அடடா! சுவைகண்டு போட்டுப் பொசுக்கிப் புசிப்பதுவே தொழிலானான்: மொழி பிறந்தது வனவிலங்கை ஒர்நாள் வளர்நெருப்பிற் சுடுங்காலை அனல் சிறிது தாக்கியதால் ஆஉஊ"என் றலறிவிட்டான் உள்ளத் துடிப்பை உணர்த்தும் ஒலிக்குறிப்பைத் தெள்ளத் தெளிந்துணர்ந்தான் தீசுட்ட அந்நாளில்; பக்கத்துக் காடுறைவோன் பலநாள் வருதலிலான் புக்கான் ஒருநாள் புது மனிதன் வரவுணர்ந்து உள்ளத் தெழு.மகிழ்ச்சி உந்தத் தலையசைத்து மெள்ளத்தன் வாயிதழை வாவென் றசைத்துவிட்டான்; மற்றொருநாள் வேறொருவன் மனம்வருந்தச் செயல்செய்தான் உற்றெழுந்த சீற்றம் உந்துதலால் உள்ளுணர்ச்சி சுற்றிச் சுழன்று சூடேறிப் போவெனுஞ்சொல் பட்டுத் தெறித்ததுகாண் பதறும் அவனுதட்டில்; இவ்வண்ணம் ஒரெழுத்தால் இயலும் மொழிகண்டான் செவ்வியநன் மொ ழி என்று செப்பும் முறையாகத் தொகைவகையில் விரிவாக்கித் தொல்பழமைக் காலத்தே வகைசெய்தான்; அம்மொழியே வளர்தமிழாக் காண்கின்றோம். தமிழ் காட்டும் உலகம் தனிமுதலாம் அந்தத் தமிழ்காட்டும் நல்லுலகு துணிமிகுத்த நாடெல்லாம் தொழுதேத்தும் வழிகாட்டி: யாதும் நம் ஊரேயாம் யாவரும் நம் கேளிரென்ற தீதில்லா இவ்வுலகைத் தெளிதமிழே காட்டிற்றுப் போருலக வெறியர்க்குப் புத்திவர நெறிகாட்டி ஒருலக வழிகாட்டும் உயர்மொழிதான் எங்கள் தமிழ் துனி - பகைமை