பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 குடி என்றால் கள் என்று கூறும் அறி. வாளர் படிசிறக்க ஆளப் பயன்படுதல் இல்லை; அரசென்றால் சுற்றும் மரமென் பார் தாமும் அரசு செலுத்துதற் காகாரே! உண்மைக் குடியரசின் நற்பொருளைக் கூர்த்துணர்ந்தார் நல்ல படியரசை ஆளப் பயன்படுவர் மாமயிலே! அறிஞர் கடமை ஆதலினால் அவ்வறிஞர் ஆசை பதவிஎனும் போதைகளில் சிக்குண்டு போகாமல், அஞ்சாமல், பாழும் அடிமைப் பழிசுமந்து தந்நலமே வாழும் முறையாலே வால்பிடித்து வாழாமல், நாட்டு நலங்கருதி, நாவீறு மிக்குயர்ந்து, கேட்டுச் செயலொழித்துக், கீழ்மைக் குணமொழித்துச், சிந்தித்துச் சிந்தித்துச் சிந்தனையில் காண்பவற்றை முந்திப் படைத்தரசை முன்னேற்ற வேண்டுமடி! அன்றே புதுவுலகம்! அவ்வுலகில் நாமரசர்! என்றேன்; அறிஞரிலே அத்தகையார் உள்ளனரோ?’’ என்னுமோர் ஐயம் எழுப்பினள் என் மனையாள்; இன் ைம் க்கின்றார் எத்துணையோ பேரென்றேன்; இன ஒ 認s(Iう Др தி து Д0 с; 6»ай u гтft ? ஒரிருவர் சொல்லுங்கள் அத்தான்! எனவுரைத்தாள்; யாரென நான் ஈங்குரைத்தல் நன்றன்று மற்றொருநாள் அப்பெயரைச் சொல்கின்றேன் என்றேன்; முகஞ்சுழித்துத் தப்பென்ன? சொல் "கென்றாள்; சத்தமின்றிக் காதருகே பேர் சொன்னேன்; மாமழையின் பேரருளால் என் வீட்டில் நீர்சொட்டக் கண் விழித்தேன் நேற்று. >><<。