பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| உண்மைத் தெய்வம் கடவுளர்தம் பெயராலே பகைமை காட்டிக் கணக்கில்லாத் தேவுகளைப் படைத்துக் கூட்டி மடமையிலே மூழ்கிஇருள் சூழ நெஞ்சம் மயங்குகையில் இளம்பரிதி என்னத் தோன்றி 'அடகெடுவீர்! அறிவிலிகாள்! உண்மை ஒன்றே ஆண்டவளும் பிறவெல்லாம் பொய்யாம் என்று திடமுடைய வீரனலால் வேறு யார்தான் தெளிந்துரைக்க வல்லார்கள் ? வாழ்க வீரன் ! (0அ) போர் முழக்கம் மாதர்தமை இழிவுசெயம் மடமைக் கோட்டை மதிலிடிந்து பொடியாகத் தகர்ப்போம் மாய்ப்போம் வேதமுறை பழைய முறை என்று சொல்லி விரைந்தெழுந்தால் தீயிட்டுக் கொளுத்தி மாய்ப்போம் தா தமுறை ஆணுக்கு வேண்டா என் ருல் தையலர் க்கும் அம்முறையை வேண்டா என்போம் காதலர்க்குக் கற்புமுறை பொதுவில் வைப்போம் கண்ணிரண்டும் சரிசமமாய்க் காண்போம் என்ருன் (கை) வாழ்க வீரம் ! அரசியலில் வீரவ வன் சமுதா யத்தின் ஆணவத்தைத் தகர்த்தெறியும் வீரன் ஆவன் முரசொலியை முழக்குகின்ற தமிழின் வீரன் மூத்த தமிழ்க் கவிவீரன் பாடல் தன்னைப் பரசிநிதம் போற்றலுடன் அவன்வ குத்த பண் புடைய நெறியினில் நாம் செல்ல வேண்டும் சுருதிவிட்டுப் பாடாமல் நேர்மை செய்வ்ோம் துாய்மைமிகு வீரத்தை வாழ்த்து வோமே (ച@) 96