பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திர п விடநாட் 6 கலிவெண்பா நீலக் கடலில் நிமிர்ந்தெழும்பும் பேரலைகள் கோலத் தமிழ்கேட்கக் கூடிவரும் நீள் கரையில் கானுந் திருநகராம் காரைக் கால் மூதுாரில் பேணும் படியமைந்த பேரரங்க மாநாட்டில் முத்தமிழர்ம் தேன்பருக முன்னித் திரண்டெழுந்தே இத்திடலில் மொய்க்கும் இருபாலீர்! என்.வணக்கம் ஆரியப் போர் கடக்க ஆர்க்கும் நெடுஞ்செழிய! விரியப் போர் தொடுக்கும் வெற்றித் திராவிடர் காள்! நாட்டின் வளமெல்லாம் நாடித் தொகுத்தெடுத்துப் பாட்டின் வளத்தாற் படைக்கின்றேன். இவ்வரங்கில் எல்லை வளம் கற்ருேன்றி மண் தோன் ருக் காலத்தே இவ்வுலகில் முற்ருேன்றி மூத்த குடியுடைய தொன்மைய தாய்க் கையால் கருத்துரைத்த காலங் கடந்தேகப் பையவே நாவசைத் த பாங்கில் நடைபயின்று 102.