பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணநாதன் அருளில்லாக் கார ணத்தால் பறவைகளாய்ப் பறந்தோடி விட்டார்; மேலும் கணமாக வந்தென்னே எறும்பு போலக் கடித்தார்கள்; கலப்புமணம் பழித்து ரைத்தார்; குணமில்லாத் தேனியாய்க் கொட்டி ர்ைகள்; கூடிவருங் காலத்துக் கூடி வந்தார் உணவோடு நலம்பெற்ருர்; செல்வ மெல்லாம் ஓடிவிடுங் காலத்தில் ஓடி விட்டார் (ίύ@) இப்பொழுதும் ஒருவர் திரு மணத்துக் காக என்குடும்பத் துடன் சென்றேன்; வரவு கூற எப்பொழுதும் முன்னிற்போர் எவரும் இல்லை; என்துணைவி வெறுங்கழுத்தும் கையுங் கண்டார்; சிப்பிதரு பொத்தான்கள் இல்லாச் சட்டை சிலைநிகர்க்கும் என்மக்கள் அனைத்துங் கண்டு செப்புகின்ருர் பஞ்சை என; ஒதுங்கி நின் ருர்; சிரித்திருந்தேன் உறவினர்தம் செய்கை கண்டு (0.சு) படுப்பதற்கோர் படுக்கையில்லே பாயும் இல்லை; பக்கத்து வீட்டிலொரு திண்ணை யோரம் தடுப்பதற்கோ ஆளில்லை; சாய்ந்து கொண்டேன்; தவமிருந்து பெற்றமக வொன்றை அங்கே அடிப்பதை நான் கண்டெழுந்து தடுத்து நின்றேன்; "அப்பப்பா இப்பொழுதே திருடக் கற்றுக் கொடுப்பதற்கோ அழைத்துவந்தாய்?’ என்று சொல்லிக் குழந்தையின்கைக் கனியொன்றைப் பறித்துச் சென்ருர் (கள்) 113