பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கிலத்தார் கண்பார்வை அவ்வாழை மேற்படலால் தீங்குளத்தார் வஞ்சத் திருடர் அறியாமல் பாண்டிப் பதியில் பதித்துக் கடல்நீரை வேண்டி இறைத்திறைத்து வீரச் சுவைமாற்றக் கூடி உழைத்தார்கள்; கூடும் புதுவையில்தான் நாடிவரும் புத்துலக நல்லா சான் நம் ஆசான் ஈடில் புரட்சி எழிற்கவிஞன் என்னுமொரு பாடல் தருவாழை பாருக் களித்ததுவே: பயனும் சுவையும் வாழையில் காய்கணிபூ பட்டை வளர் தண்டு கீழே யுறுகிழங்கு கேடின்றிப் பயனுறல்போல் பாவல்ல வாழை பயக்கின்ற அத்துணையும் ஒவின்றி மக்கட் குறுபயனை நல்குவதாம்; காதற் சுவையுண்டு கல்விச் சுவையுண்டு தீதற்ற வீரச் சுவையும் தெரிவதுண் டு பத்திச் சுவையும் பழமை தரும் சுவையும் மெத்தப் புதுமை விரும்பும் சுவையும் புரட்சிச் சுவையும் புகுந்தபகை வர்க்கு மருட்சிச் சுவையும் வழங்குவது நம்வாழை; சுவைகாளுர் சாதிச் சழக்காலே சாப்பிடுவோர் மேலுலகம் ஒதிப் பிழைப்பவர்கள் ஒரா யிரந்தெய்வம் உண்டென் றலைந்திடுவோர் ஊரேய்த்து வாழ்ந்திடுவோர் உண்டால் சுவைநல்கா திவ்வாழை உண்மையிது; 126