பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என வுரைத்தாள்; பொங்கலோ?: என்றெழுந்தேன்; இல்லை மனவருத்தம் பொங்கலலால் மற்றில்லை, பக்கத்துப் - பெண்ணுெருத்தி நெஞ்சிரங்கிப் பேருதவி செய்தமையால் உண்ண வழியுண் (டு) ஒருநா ழிகை பொறுப்பீர் ! ஆக்கிப் படைக்கின்றேன். அத்தான் ’’ என; அவளே நோக்கிமுகம் தாழ்த்திப்பின் நூலெடுத்தேன் பாப்புனைய ; சித்தம் கலங்கியதால் சீர்த8ள கள் மாய்ந்தனவே எத்துயரம் வந்தாலும் எல்லை கடந்தறியேன் பாவை நிறுத்திவிட்டேன்; பையன் சிறுவனே என் பாவை அடிக்கப் பதறுவதைக் கேட்டெழுந்(து) ஏ னடித்தாய் ?’ என்றேன்; 'திருடியதால்’’ என்றவுடன் நான் துடித்து நாமடித்துச் 'செய்தனையோ ?’ என்ற தட்ட, ' ஆமாம், பசியப்பா அன்னம் திருடிவிட்டேன் \ தீமை இனிச்செய்யேன் சீற்றம் தவிர் - கென்ருன்; . வாயடைத்துப் போயினேன்; வாழ் வில் உணவின்றேல் தீயன தாம் பல்கும் திருட்டுத் தொழில் பெருகும் என்றுணர்ந்து மன்னித் திளையவனே விட்டுவிட்டேன்; முன்றில் முன் என் சிறுவர் மோதி அடிதடிகள் செய்திருந்தார்; சீறிச் சினந்துரைத்தேன்; ஒர்சிறுவன் மெய்யுரைத் தான்; ' என்னின் மிகுபண்டம் அண்ணனுக்(கு) அன்னை கொடுத்தாள், அதனுல் பிணக்குற்ருேம் | என் ஆன அடிக்காதீர் !' என்றுரைத் தோடிவிட்டான் ; ஒஓ ! அதுசரியே, ஓரிடத்தில் உண் டிமிகின் ஒவாப் பகை மூளும் ஓநாய்ச் செயல்விஞ்சும் பாரிற் சமமாகப் பாத்துரண் கொடுத்துவிடின் போரில் இறங்குகின்ற"புன்மைகள் தாம் உண்டோ ? வயிற்றுக் கவலையின்றேல் வாழ்க்கைவளம் எய்தும் அயிர்ப்பில்லை; உண்டிமுதற் றே உணவின் பிண்ட"மெனச் ! 25