பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயற்கரிய நட்பு ஆன்றவிந்த பலசான்ருேர் வாழும் ஊரேன் ஆதலினுல் மகிழ்ந்திருந்தேன் நரையொ ழிந்தேன் நான்,புலவீர் ! என்றுபிசி ராந்தைப் பேரார் நவிலுவரேல் உடலுரமும் மகிழ்வும் நட்புத் தான்றருமென் றுணர்கின்ருேம், தக்கார் கூடி நகலினினி தாயிற்பின் காண்போம் அந்த வான்ருெடுக்கும் பதிஎன் ருர் சான்ருேர் ; வாழ்வில் செயற்கரிய யாவுளவோ நட்பே போல ? (சு) கொடுத்துங் கொளல் இறப்பொழிக்கும் மருந்தனைய எங்குங் காணு இருநெல்லிக் கனிஒன்றை நெடுமான் அஞ்சி மறைத்திருந்து தானுண்னும் மனமே இல்லான் கொடுத்துவக்கும் மாண்புடையான் ஈர நெஞ்சான் சுரக்கின்ற அன்பூற அவ்வை என்னும் சொற்கிழத்திக் கீந்துவந்தான் என்ற செய்கை, சிறப்பிருக்கும் பண்பினர்க்குப் பொருள்கொ டுத்துங் கொளல் வேண்டும் நட்டென்ற உண்மை காட்டும் (எ) தெளிந்த நட்பு தண்ணிலவின் ஒளிக்கதிர்கள் சாள ரத்துள் தலைகாட்டி ஒளிசெய்ய, பஞ்சின் சேக்கை வெண்மலரின் மணம்விரிக்க, தென்றற் காற்று விளையாடி அவண்திரிய, பொய்யாச் சொல்லன் கண்மலர்கள் குவித்திருந்தான்; தனது நல்லாள் கணவனென அவனருகே துயிலக் கண்டான் கண்ணியவான் சீனக்கன், பதறல் இல்லான் கதறல் இலான் அவரிடையே பள்ளி கொண்டான் (அ) 36