பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேனும் தினையும் என்றவுடன் என்ன ருகில் ஏந்திழையாள் வந்திருந்து குன்றின் குறிஞ்சிக் கிளை விளை த்த செந்தேனும் கொல்லைப் புனத்துக் கொழுந்தினையின் மென்மாவும் வள்ளிக் கிழங்கும் வகையாய்ப் படைத்திட்டாள் சோலைக் காட்சி அந்தச் சுவையை அருந்தியபின் ஆங்கிருந்த சந்தனச் சோலைக்குள் சார்ந்தோம் ; ஒருமரத்தில் பற்றிப் படர்ந்த பசுங்கொடியைக் காட்டினேன் முற்றச் சிவந்த முகஞ் சிவந்து நாணத்தால் என் குறிப்பை மாற்ற எழிலருவி பாரு மென்ருள் தன் குறிப்பை நானுணர்ந்து தையால் உன் கண் போலும் நீலக் கருங்குவளை நெஞ்சால் பிணைந்த நமைக் கோல இதழ் திறந்து கூர்ப்பாக நோக்குதல்பார் ! என்று நான் காட்ட, ' இதழ் தந்த தாமரையை நின்று தவிக்கவிட்டு நீள்சுனேக்குத் தாவிவரும் வண்டொன் றருகிருந்து வாய்சூழல் பாரு மென்ருள் ; கண்டனத்தைக் கண்டுகொண்டேன் கைதந்த நல்லாரை வஞ்சித்துக் கைவிட்ட வண்டுச் செயலினை நான் நெஞ்சத்துங் கானும் நினைப்பில்லேன் என்னுங்கால் பிரிவு குன்றத்தார் தொண்டகம் கொட்டும் பறையொலியைக் குன்றத்தாள் கேட்டுக் குலத்தலைவர் வந்துவிட்டார் இன்றுபோய் நாளே இவண் வருவீர் என்றுரைக்க நன்ரும் எனப்பிரிந்தேன் நான். 83