பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நாளில் ஒருசிறிய நன்மை செய்தோர் இருநிலத்தார் அறியும் வகை எடுத்து ரைப்பர் பொன்ளுேடு புகழ்விரும்பிச் செய்தித் தாளில் புகழ்ந்தெழுதப் பொருள் கொடுப்பர்; பொய்மை யன்று; முன்னுக நாற்பஃதாண் டெல்லே நீயே - முனைந்திருந்து நற்பணிகள் ஆற்று கின் ருய்! இந்நாளும் பிறரறியா தடக்கி வைத்தாய்! என்போல்வார் பாட்டுக்கு மறைந்தா போகும்? (டு) இவ்வுலகில் தீமையைத்தான் மறைத்துச் செய்வர்; நன்மைகளே ஏன் மறைத்துச் செய்கின் ருய்நீ? செவ்வியனே நீமறைத்துச் செயினும் எங்கள் சிறுசெந்நா பறையறைந்து யாண்டும் சாற்றும்; ஒவ்வியதே நின்னடக்கம் பெருமை காட்டும்; உலகுக்கு நாங்கள் சொலல் நன்றி காட்டும்; எவ்வகையால் முயன்ருலும் புலவன் நாவைத் தடைப்படுத்த இயலுவதோ? அடங்கா தன்ருே! (சு) எழுத்தறிய மாட்டாமல் ஏங்கும் நாட்டில் எண்ண ரிய திருப்பணி கள் எங்கும் ஆக்கி வழுத்துகின்ற மாந்தருக்கு நன்று சொன்ன வாய்மொழியைப் பாரதியின் பாடல் தன்னை வழுத்தி அதை வாழ்வாக்கிக் கல்வித் தொண்டை வழுவாமல் ஆற்றுவதே கடவுள் தொண்டாய் அழுத்தமுற மனத்திருத்தி நாளும் செய்வாய்! - அறநெறியின் தனிமுதலே! வாழ்க வாழ்க! (எ) 86