பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2. தொடக்கப் பள்ளி
நடைமுறையை வெறுத்தார்

இந்திய நாடு, உலகப் புகழ் பெறுவது வானைமுட்டும் இமயச் சிகரங்களாலோ, கங்கை, பிரமபுத்ரா, யமுனா, கோதாவரி, மஹாநதி, காவேரி, வைகை ஆறுகளாலோ சித்தன்ன வாசல், மாமல்லபுரம், குடுமியான் மலை, திருச்சி, காஞ்சி, அஜந்தா, எல்லோரா, தாஜ்மஹால், பூரி ஜகன்னாத், ஆக்ரா, அஜ்மீர் போன்ற சிற்பக் கோயில் கட்டடங்களாலோ நெய்வேலி நிலக்கரி, சேலம் இரும்பாலை, டாடா இரும்பு ஜெம்ஷெட்பூர் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்பெட்டி அல்லது கோலார் தங்க வயல்களாலோ சென்னை மரீனா, திருவனந்தபுரம், கோவளம், விஜயவாடா கப்பல் தொழிற்சாலை, கல்கத்தா துறைமுகக் கடற்கரைகளாலோ அன்று!

திருவள்ளுவர் பெருமான், காந்தியண்ணல்; நேரு பெரு மகன் சுபாஷ் சந்திர போஸ், ஜகதீச சந்திர போஸ், சர்.சி.வி.ராமன், அப்துல்கலாம், டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், கணக்கியல் மேதை ராமானுஜம், வல்லபாய் படேல், வீரசாவர்கர், டாக்டர் அம்பேத்கர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற பெருமக்கள் ஒவ்வொருவரும்