பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

61



கவிஞர் தாகூர் பெருமான் திடீரெனக் கண்ணீர் விட்டார். வாய்விட்டு அழமுடியாமல் தேம்பித் தேம்பிக் கண் கலங்கினார்! அதாவது தனது அருமை மனைவி மிருணாளினி மறைந்து விட்டார் என்று மற்றவர்களுக்குக் கூற முடியாமல் அவரது கண்கள் கண்ணீரை மட்டுமே சிந்திக் கொண்டிருந்தன!

மிருணாளினி தேவியார் அருகே உலகம் புகழும் கவிஞர் பெருமான்! பெற்ற பெண்கள் மூவர்! மகன்கள் இருவர்! பதின்மூன்று மூத்தார்கள் கண்ணிர் பெருக்கோடு; அவர்களது துணைவியர்கள் அனைவரும் கதறலோடு, மாமியாரும், மாமனாரும் துன்ப உணர்வுகளோடு துவண்டு கிடந்தார்கள்.

முப்பத்தொன்பதாம் வயதிலேயே கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் மனைவியை இழந்தது முனிவர் போல வாழ்ந்தார்!