பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்



முன்னிரவுக்கும், நள்ளிரவுக்கும் இங்கே பெரிய வேறுபாடு இல்லை. கல்கத்தா நகரத்தில் உறக்கம் இல்லாத போது, இரவு என்பது இருள் என்ற பெரிய ஆறு மெல்ல ஓடுவது போல் தோன்றும்; அதன் ஓட்டத்தில் எழும் பலவகை ஒலிகளையும், ஒருவர். படுக்கையில் மல்லாந்து படுத்த படியாகவே கேட்டுக் கொண்டிருக்கலாம்.

ஆனால், இங்கே இரவு என்பது, அமைதியாக அடங்கி இருக்கின்ற, அசைவின் அறிகுறியே இல்லாத பெரிய ஏரிபோல் இருக்கின்றது. நேற்று இரவு நான் படுக்கையில் இப்பக்கமும் அப்பக்கமும் திரும்பித் திரும்பிப் பொழுது போக்கினேன். ஏதோ ஒரு பகுதியாகத் தேங்கி நிற்பது போன்ற நிலையில் கிடந்தேன்.

இன்று காலையில் வழக்கமாக எழும் நேரத்தில் எழாமல், சிறிது நேரம் கழித்தே படுக்கையிலிருந்து எழுந்தேன். கீழடுக்கில் என் அறைக்கு வந்து தலையணையின் மேல் சாய்ந்து கொண்டு, ஒரு காலை மற்றொரு முழங்காலை மேலிட்டபடி கிடந்தேன்.

ஒரு கரும்பலகையை எடுத்து மார்பின்மேல் வைத்துக் கொண்டு, காலைத் தென்றலும் பறவைகளின் இசையும், தொடர, பாட்டு ஒன்று எழுதத் தொடங்கினேன். என்முயற்சி வெற்றியாகவே நடைபெற்றுக் கொண்டிருந்தது.

என் இதழ்களில் புன்முறுவல் நிற்க கண்கள் பாதி மூடியபடி இருக்க, பாட்டின் ஒலி நயத்திற்கு ஏற்ப என் தலை அசைய, என் முணுமுணுப்பு பாட்டுருவாக அமைந்து கொண்டிருந்தது. ஆனால், தபால் வந்து குறுக்கிட்டது.