பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T அன்புள்ள இளவரச அக்கு ...) जTज्ञा= T - - T - - T 118. T கொண்டமையால் Efg பிற மொழிப் பெயருக்கு அடிமையாகினர். பெண் மக்களுக்கு பிரேமலதா, லில்லி. சரோஜா, வைஜயந்தி என்றெல்லாம் பெயர் சூட்டுகின்றனர். செல்வி, குமுதம், அன்னம், அல்லி, பூங் கோதை, தேன் மொழி, பாவை, ஒவியம், யாழிசை, பொன் னி, பூங்கொடி, தென்றல், காவிரி யென்ற பெயர்களை ச் சூட்டினால் அவ் வொலி அழைப்போர் வாயில் நுழையாதா ? அன்றி அழைக்கப்படுமாயின் செவியிற் புகாதா ? ஆண் மக்களுக்குப் பிரவின், சுரேஷ், நரேஷ், ஜமால், உசேன், ஜார்ஜ், டேவிட், சுப்பிரமணியன் என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்கின்றோம். பழனி முருகன், ஆறுமுகம், தழிழண்ணல், கதிர் வன், அருளாளன், பாரி, குமணன், செல்வம், அமுத ன், கலைக் கோ, அருள், செழியன்'iலன் என்றெல்லாம் இனிக்குந் தமிழிற் பெயர்வைத்தால் அழிந்தா விடுவோம் ? ... " தமிழிற் பெயர் வைத்துக் கொள்வதால் நாம் தமிழர்கள் என்பதைக் காட்டிக் கொள்வதுடன் மற்றொரு நன் மையும் உண்டு சாதி வேறுபாடுகள் அகற்றப்பட வேண்டும் என்று நாட்டு நலங்கருதும் பெரியார் அறிஞர் அனைவரும் கூறுகின்றனர். அதற்குப் பல வழிகளும் கூறிவருகின்றனர். சாதி நீக்கத்திற்குத் தமிழ்ப் பெயர் ,வைப்பதும் ஒரு வழியாகும். தமிழண்ணல், கதிரவன், அருளாளன், அன்பழகன், பாரி முதலிய பெயர்களுடன் சாதிப் பெயர்களை ஒட்டிப் பார். ஒட்டவே ஒட்டாது. இவ்வாறெல்லாம் தமிழை வளர்ப்பது நம் கடமை தம்பி. உன் தந்தை முடியரசன்