பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாள்களா ? நாட்களா ? நாட்கள் என்று குறிப்பிடுவது தவறு. நாள்கள் என்றே குறிப்பிடுதல் வேண்டும். தோள்கள் என்பதை தோட்கள் என்றோ வாள்கள் என்பதை வாட்கள் என்றோ நாம் குறிப்பிடுவதில்லை. நாள்கள் என்றால் பல நாள் என்று பொருள். நாட்கள் என்றால் புதிய கள் என்று பொருள்படும்; நாண்மலர் என்பது போல, ஆகவே நாளின் பன்மை குறிப்பதானால் நாள்கள் என்றே வருதல் வேண்டும். தனிக்குறிலை அடுத்து வரும் லகர, ளகரங்கள் தாம் றகர, டகரங்களாகத் திரியும்; கற்கள், முட்கள் புட்கள் என்பன போல. நூல், நாள் என்பன பால் பகா அஃறிணைப் பெயர்கள் எனப்படும். அஃதாவது ஒன்றன்பாலா பல வின் பால என்று பகுக்க இயலாது. அவை ஒன்றையும் குறிக்கும் பலவற்றையும் குறிக்கும். ஒரு நூல் பல நூல் என்றும் ஒருநாள் பல நாள் என்றும் கூறுவர். “ஒரு நாள் செல்லலfம் இருநாள் செல்லலiம் பலநாள் பயின்று பல ரொடு செல்லினும்” என்ற அவ்வையார் பாடலி ஒருநாள் என்றும் பலநாள் என்றும் ஒருமையிலும் பன்மையிலும் வந்துளது. சிலப்பதிகாரம் என்னும் நூல் முத்தமிழ்க் காப்பியம் எனப்படும் என்றவிடத்து, நூல் என்னுஞ் சொல் ஒருமையில் வந்தது. நூல் நிலைய திறக்கப்பட்டன என்ற விடத்து நூல் என்பது பன்மை பொருளில் வந்தது. பன்மையைக் குறிக்கப் பிற்காலத்தே 'கள்' என்பதைச் சேர்த்தனர். கள் புகுந்தபின்புதா இந்தக் குழப்பம்.