பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ரெசர் முடியரசன் -TTTTTTT —" -T 139) மிகுதல் கூடாது. உன் நண்பர்களுக்கு இதனை எடுத்துச் சொல்லி, அவர்கள் இல் லத்து அழைப்பிதழ்களைச் செவ்வனே அச்சிட வேண்டிக்கொள். பெறுநரா ? பெறுனரா ? என முகவரி எழுதுமிடத்தில் பெறுனர் என்று குறிப்பிட்டிருந்தாய். இனி மேல் பெறுனர் என்று குறிப்பிடாமல் பெறுநர் என்று குறிப்பிடு. பெறுநர் ான்பது பெயர்ச்சொல். பெறுந் + அர். இதில் வரும் நகர ஒற்றுக்குப் பெயரிடநிலை யென்று பெயர். ஒட்டுநர், நடத்துநர், இயக்குநர் என்பனவும் அவ்வாறே பெயரிடை நிலை பெற்றே வரும். நன்கு படித்தவர்களுங்கூடப் பெறுனர் என்று எழுதி விடுகின்றனர், பிறரைத் திருத்தி வழி காட்ட வேண்டிய வர்களே வழி தவறினால் என் செய்வது ? அரசு அலுவலகங்களிலிருந்து வரும் மடல்களிற் கூடப் பெறுனர் என்று குறிப்பிடப் பெறுவதைக் கண்டு மனம் நோவதுண்டு. தமிழ் தமிழ் என்று கூச்சலிடுவது பெரிதன்று. அதன் வளர்ச்சியில் மனம் செலுத்த வேண்டும். அதுதான் பயன்தரும். ஆணையரா? ஆனையரா? ஒரு நகராட்சியில் ஒர் அறிவிப்பு எழுதி வைத்திருந்தனர். நானும் எ ன் நண்பரும் படித்தோம். அந்த அறிவிப்பின் கீழ் ஆனையர் என்று எழுதப் பட்டிருந்தது. நான் வருந்தினேன். என் நண்பர் சொன்னார் 'அது சரிதானே நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள் ? என்று. என்ன நண்பரே ஆணையர் என்றுதானே