பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் தன்னைப் போலப் பிறரையும் ஒப்பாக - ஒன்றாகக் கருதி வாழ வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தைத் தன்னுள் ாடக்கிக் கொண்டிருக்கிறது அச்சொல். வாழ்வு, செல்வம், இன்பம் முதலிய நலங்களைத் தான் எவ்வாறு நுகர ாண்ணுகின்றானோ அவ்வாறே பிறரும் அவற்றை நுகர வேண்டும் என்று, ஒப்ப நோக்கி வாழ்வதுதான் ஒப்புரவு. பிறரையும் ஒப்பாகக் கருதும் தன்மைத்தாகிய ஒப்புரவென்னுஞ் சொல்லுக்கு வேளாண்மை என்ற பிறிதொரு பெயரும் உண்டு. உழவுத் தொழிலையும் வேளாண்மை என்று சொல்லுகிறோம். அத்தொழில் செய்வோனை வேளாளன் ான அழைக்கிறோம். உழவுத் தொழில் அவனுக்காக மட்டுஞ் செய்யப்படுவதன்று; ஊருக்காக - உலகுக்காகச் செய்யப் படுவது. ஏர் நடக்காவிடின் பார் நடக்காது. ஆதலின், உலகுக்குதவியாக விளங்குந் தொழிலை வேளாண்மை ாணவும், ஊருக்கெல்லாம் உதவியாக இருப்பவனை வேளாளன் ாணவும் அழைக்கின்றோம். ஒப்புரவு, வேளாண்மை என்னும் பண்டைத் தமிழ்ச் சொற்கள் உணர்த்தும் நாகரித்தை பண்பாட்டை நினைந்து நினைந்து, வியந்து வியந்து, பாராட்டத் தோன்றுகிறது. இப்பண்புதான் இன்று உலகெங்குஞ் சமதர்மம் ான்று பேசப்படுகிறது. இயல்பாக வாய்த்திருந்த இப்பொதுநலப் பண்புதான், அறிவு மேம்பாடுற்றுள்ளதாகக் கூறப்படும் இக்காலத்தில், அருகிக் கொண்டே வந்து, தன்னலமே கருதுந் தனிப் பண்பாக மாறிவிட்டது. ஆதி மனிதனாக மாறிவிட்டான்