பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் ஆம், இக் கூற்று உண்மையே. இம் மலைப் பாங்கரில் அத்தகு கற்கள் அமைந்து கிடக்கின்றன. உண்மை இவ்வாறிருக்க இத்தகு கற்களைச் சுயம்பு லிங்கம்’ என்றும் விடங்கன்’ என்றும் விளம்பி, தானே தோன்றிய லிங்கம் என்றும் உளியினாற் செய்யப்படாதன. ான்றும் அச் சொற்களுக்குப் பொருளும் கூறுவர். இயல்பாகவே இலிங்கம் போல அமைந்து கிடந்த இத்தகு கற்களைக் கொணர்ந்து கோவிலில் அமைத்து அவற்றிற்கு மேற்கூறிய பெயர்களையும் சூட்டி விட்டார்கள். இவ்வுண்மை புலனாகாவாறு, ‘சுயம்பு லிங்கம்’ எனவும் விடங்கன்' ான வும் பெயர் கூறி அதனால் ஒரு தனி மகத்துவம்' கற்பித்துக் கயிறு திரித்து விட்டனர். உண்மைக்குத் திரை போட்டு விட்டனர். உண்மையை மறைப்பதாற்றானா கடவுளுண்மை பரவும்? இப் பொய்க் கதைகளால், - போலிக் கூற்றுகளாற்றான், அது பழிக்கப்படுகிறது என்று நான் கருதுகின்றேன். முகில் எப்பொழுதுமே கதிரவனை மறைத்துக் கொண்டிருக்க முடியுமா ? ஒரு நாள் உண்மை வெளிப்பட்டே தீரும். சரி; கடிதம் நீண்டு கொண்டே செல்கிறது. குற்றாலம் பற்றி இன்னும் எவ்வளவோ சொல்ல வேண்டியுளது. அடுத்த மடலில் அதனை எழுதுகிறேன். உன் தந்தை 05.09. 1956 முடியரசன்