பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் - SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS --- 67 பதிற்றுப் பத்து என்னும் நூலில் சொற்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் (பதிற் - 21) என்னும் வரியில் வரும் 'கேள்விக்கு வேதம் என்று பொருள் கூறுவர். திருக்குறளில் கேள்வியென்ற அதிகாரத்தில் ൽ "செவியுணவிற் கேள்வி யுடையாற் அவியுல்வன் ஆன்றாரோ டொப்பர் நிலத்து (413) என்னும் குறட்பா வில் வரும் கேள்வி செவி யுணவாகிய கேள்வியறிவு எனப் பொருள்படுகிறது. அஃதாவது நல்லோர் கூறும் அறவுரைகளை, அறிவுரைகளைச் செவியாற் கேட்பது என்பது பொருள். "கேட்பினும் கேளாத் தகைய வே கேள்வியால் தோட்கப் படாத செவி' - (418) என மற்றொரு குறளும் உண்டு. இதற்குக் கேள்வி யறிவால் துளைக்கப்படாத செவிகள், (இயற்கையான துளை கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே என்று பொருள். இவ் விரு குறட்பா வாலும் கேள்வி என்னுஞ் சொல்லுக்குச் செவிப் பொறியின் தொழிலாகிய கேட்டல் என்பதுதான் பொருள் என வுணர்கிறோம். இது வரை எடுத்துக் காட்டப்பட்ட மேற் கோள்களால் கேள்வி' என்னுஞ் சொல்லுக்குக் கல்வியறிவு, மந்திரம், இசை, யாழ், வேதம், செவியாற் பெறப்படும் கேள்வியறிவு என்னும் பொருள்கள் உண்டு எனத் தெரிந்து கொண்டோம்.