பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* "அன்புள்ள இளவரசனுக்கு ெ . - - அடுத்துப் புரிதல் என்னுஞ் சொல் லைப் பற்றி ஆய்வோம். முன்னைப் பொருள் என்ன ? இற்றைப் பொருளென்ன ? எனக் காண்போம். "இடிபுரிந்து எள்ளுஞ்சொற் கேட்பர் மடி புரிந்து மாண்ட உஞற்றி லவர்” (குறள் 607) என்ற குறட்பாவில், மடிபுரிந்து என்னுந் தொடர்க்குச் சோம்பலை விரும்பி என்று பொருள். இங்கே புரிந்து' என்னுஞ் சொல் விரும் பியெனப் பொருள் படுகிறது. “ஒர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார் மாட்டும் தேர்ந்து செய் வஃதே முறை” - (குறள் 541) இக் குறட்பா வில் இறை புரிந்து என்பதற்கு 'நடுவுநிலைமை பொருந்தி’ என்பது பொருள். இங்கே 'பொருந்தி’ என்று பொருள் படுகிறது. ‘புரி ஞெகிழ் முல்லை இத் தொடர் க்கு, முறுக்க விழ்ந்த முல்லை என்று பொருள். இங்கே புரி என்ற சொல் முறுக்கு என்று பொருள்படுகிறது. 'அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து’ - புறம் 35 என்ற புறநானூற்று வரிக்கு அறக் கடவுள் மே வி ஆராய்ந்தாற் போன்ற என்று பொருள். இங்கே புரிந்த” என்பது ஆராய்ந்த என்று பொருள் தருகிறது. அழல் புரிந்து அடர் தாமரை - (புறம் 29) என்ற புறப் பாட்டு வரி க்கு , எ ரியால் ஆக்கப் பட்ட தாமரை என்பது பொருள். ஈண்டுப் புரிந்த என்ற சொல் ஆக்கப்பட்ட எனப் பொருள்படுகிறது.