பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் 'ஏன் மறுத்து விட்டார்? வெகுளியுடன் மன்னன் வாயிலிருந்து வெளிவந்தது இவ்வினா. 'ஆண்டவனுக்குத்தான் அவருடைய பாமாலை உரியதாம். மனிதரைப் புகழ்ந்து பாட அவர் தம் நா இசையாதாம்! அமைச்சர். 'ஒ! ஆண்டவனுக்குத்தான் இசையுமோ அந்த நா ? மகளிருக்கென்றால் மட்டும் சிறிது மாறிவிடும் போலும்!” அரசன். வேந்தே நும் பேச்சு நெறி தடுமாறுகிறது! என்று அமைச்சருக்கருகிலிருந்து மற்றொரு குரல் வந்தது. 'யாரது ? தடுமாறுவது என் பேச்சா ? ஆழ்வாரின் போக்கா ? மகளிரைப் பாடுகிறார்; மன்னனைப் பாட மறுக்கிறார் பெருமிதத்துடன் பேசினான் அரசன். அஃது அவர் விருப்பம்; அவர் உரிமையில் தலையிட ாவருக்கும் உரிமையில்லை. என்று மறுமொழி தந்தது அந்தக் குரல். ‘விருப்பம் ! உரிமை | ஒ | ஒ | குமரியின் மீது விருப்பம்! நாடாளும் கொற்றவன் மீது வெறுப்போ ? கிழவியைக் குமரியாக்கிக் கொண்டது உரிமை நாட்டு மன்னனின் வேட்கையைப் புறக்கணிப்பதும் உரிமை ?” அரசன் சினந்து பேசினான். ‘அரசே! தங்களைப் போன்றார் இவ்வாறு பேசுவது முறையன்று. பெரியாரைப் பிழையேல் என்பது முதுமொழி ! ஆண்டவன் புகழ்பாடி, தாமுண்டு தம் செயலுண்டு என்று