170 கவி கனி கவி சுகதே கனி சுகதே கவி கனி கவியின் கனவு மணிவண்ணா இறுகத் தழுவி அணைத்துக் கொண்டு கண்ணி நிறைய எங்கே உன் தங்கை சாந்தி..? (அவர் பெரிதும் எதிர்பார்த்து சாத்தியைத் தேடுவதால், திடீரென இல்லையென்று சொல்வக் கூடாதென எண்ணிக் கனிமொழி அருகில் வந்து - அப்பா! நான்தானப்பா தங்கள் சாந்தி..! ஆ என் சாந்தியா! எங்கே, கை எங்கே? (நன்றாகப் பார்த்து/ என்னை ஏமாற்றாதீர்கள். என் உறக்கம் தெளிந்துவிட்டது. ஆ! எவ்வளவு பெரிய உறக்கம் ஆ! சாந்தி..! ஐயா சாந்தி என் மாளிகையில்தான் இருக்கிறாள். முதலில், ஆண்டுக்கணக்காக ஒய்ந்து போன தங்கள் மனத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். பிறகு அனைவரையும் காணலாம், தங்கள் கனவும் நனவாகும். விதியின் சோதனையையும் வெல்லலாம். விதி, விதியை வெல்வோம். ஆம்! கனவு! எனது நாடகம், அதிலிருந்த பாட்டுத்தான் நீங்கள் பாடியது. நான் ஆவலோடு எழுதிய அற்புத நாடகம் விதியை வெல்வோம் அதன் பாட்டு. அதிருக்கட்டும். தங்கள் அரசகுமாரன் என்றீர் களே! அதென்ன? தயவு செய்து சொல்ல முடியுமா? ஆ. அது உயிர் போன்ற இரகசியம். (சந்தேகத்துடன் ப7ர்க்கிறார் சுற்றிலும்) பயப்படாதீர்கள்! பொய்யெல்லாம் மறையும் காலம் வந்துவிட்டது. இங்கு சூழ்ந்திருப்பவர்கள் அனைவரும் நமது நண்பர்கள் - நம்பத் தகுந்தவர்கள்.
பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/172
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை