சிறப்பில்லாத எதுகை மோனைகள் 135
இது ழகர ஆசிடையிட்ட எதுகை.
பாகமதிற் பெண்ணுடைய பண்பன் அடியார்கள் ஆர்கலிசூழ் வையக் கணி.
இது ரகர ஆசிடையிட்ட எதுகை.
அடிகளில் இடையிடையே ஒவ்வொன்றை விட்டு எதுகை அமைந்தால் இடையிட்டெதுகை பாகும்.
‘நீடா ரிவணென நீமனம் கொண்டார் கேளார் கொல்லோ காதலர் தோழி வாடாப் பெளவம் அறமுகந் தெழிலி பருவம் பொய்யாது வலனேர்பு வளைஇ ஓடா மலையன் வேலிற் கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே.” இதில் ஒன்றுவிட்டு ஒரடியில் எதுகை வந்தமையால் இடையிட்டெதுகை யாகும். -
முதலிரண்டடியும் ஒரெதுகையாய்ப் பின் இரண்டடியும் மற்றோர் எதுகையாய் வந்தால் இரண்டடி எதுகை யாகும்.
“துவைக்கும் துளிமுன்னிக் கொற்கை மகளிர் அவைப்பதம் பல்லுக் கழகொவ்வா முத்தம் மணங்கம்ழ்தார் அச்சுதன் மண்காக்கும் வேலின் அணங்கமுத மந்நலார் பாட்டு.” இதில் இரண்டடி எதுகை வந்தது. இரண்டாம் எழுத்தன்றி மூன்றாம் எழுத்து ஒன்றி வந்தால் மூன்றாமெழுத்தொன் றெதுகை யாகும்.
“பவழமும் பொன்னுங் குவைஇய முத்தின்
திகழரும் பின்றன. புன்னை."