இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
136 கவி பாடலாம்
இதில் மூன்றாம் எழுத்தாகிய ழகரம் ஒன்றும் எதுகை வந்தது.
விட்டிசைத்தலால் வல்லொற்றைப் போல ஒசை அமைந்து எதுகை வந்தால் அது விட்டிசை வல்லொற் றெதுகை யாகும். -
“பற்றிப் பலகாலும் பான்மறி உண்ணாமை
நொஅலையல் நின்ஆட்டை நீ.” இதில் நொ என்ற குறிலுக்குப் பின் வரும் அகரம் விட்டு இசைப்பதனால் வல்லோசை உண்டாகிறது. இது விட்டிசை வல்லொற்றெதுகை. -
தொடர்ந்து பல சீர்களிலும் எதுகை வந்தால் அது வழி யெதுகை ஆகும்.
“மண்டலம் பண்டுண்ட திண்டேர் வரகுணன்
தொண்டியின்வாய் - கண்டலந் தண்டுறைக் கண்டதொன் றுண்டு
கனமகர குண்டலங்கெண்டை யிரண்டொடு தொண்டையுங்
கொண்டெர்திங்கள் மண்டலம் வண்டலம் பக்கொண்டல் தாழ
வருகின்றதே.”
இதில் வழியெதுகை வந்தது.