166 கவி பாடலாம்
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.”
இது பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். அரையடிக்கு இரண்டு மாவும் ஒரு காயும் உள்ள அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த அடிகளே மீட்டும் மடக்கி வந்தது இது. இத்தகைய விருத்தங்களை இரட்டையாசிரிய விருத்தங்கள் என்றும் கூறுவர்.
‘துள்ளுமறி யாமனது பலிகொடுத் தேன்கர்ம
துட்டதே வதைகளில்லை துரியநிறை சாந்ததே வதையா முனக்கே
தொழும்பனன் பபிடேகநீர் உள்ளுறையி லென்னாவி நைவேத்தி யம்ப்ராணன்
ஓங்குமதி துபதீபம் ஒருகால மன்றிதுசதாகால பூசையா
ஒப்புவித் தேன்கருணைகூர் தெள்ளுமறை வடியிட்ட அமுதப் பிழம்பே
தெளிந்ததே னேசீனியே திவ்யரசம் யாவும் திரண்டொழுகு பாகே
தெவிட்டாத ஆனந்தமே கள்ளனறி ஆடுமே மெள்ளமெள வெளியாய்க்
கலக்கவரு மானந்தமே கருதரிய சிற்சபையி லானந்த ந்ருத்தமிடு
கருணாக ரக்கடவுளே.”
இதுவும் பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இதுவும் இரட்டை ஆசிரிய விருத்தம்.